ஏப்ரல் 22 அன்று அமெரிக்காவில் கொண்டாடப்படுகின்ற புவி நாள், புவியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சரியான மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதாகும். 1970 ஆம் ஆண்டு சுற்றுச் சூழலை குழு விவாதப் பொருளாக மாற்ற அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட புவி நாள் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.
அமைதிக்காக போராடிய ஜான் மகோநெல் என்பவரால் 1969 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மரபின்படி, ஒவ்வொரு வருடமும் இரவும் பகலும் சமமாக வரும் மார்ச் நாளன்று, பெரும்பாலும் மார்ச் 20 ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் புவி நாளைக் கொண்டாடுகின்றன.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகரான எட்டி ஆல்பர்ட் என்பவர் புவி நாளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
இப்போது வரை நடக்கும் இந்த வருடாந்திர சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் குறித்த பணிகளை 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக மேற்கொண்ட ஆல்பர்டின் பணி சிறப்பானது என்றாலும், புவி நாள் ஆல்பர்டின் பிறந்த நாளான ஏப்ரல் 22 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது ஒரு தரப்பினரின் கூற்றாகும்.
அந்தக் கால கட்டத்தில் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மீது அளவு கடந்த தாக்கத்தை ஏற்படுத்திய கிரீன் ஏக்கர்ஸ் என்ற தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆல்பர்ட் இன்றளவும் சிறப்பான முறையில் அறியப்படுகிறார்.
ரான் கோப் என்பவர் சுற்றுப்புறச்சூழல் குறித்த குறியீடு ஒன்றை உருவாக்கினார். அது பின்னர் புவி நாள் குறியீடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது, அத்துடன் அது மக்களின் பொதுச் சொத்தாக அறிவிக்கப்பட்டது. அந்தக் குறியீடு முறையே "என்விரோன்மேன்ட்" மற்றும் "ஆர்கானிசம்" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துக்களின் ஒருங்கிணைப்பாகும்.
வரலாறு முழுவதும் தீட்டா குறியீடு அல்லது அது போன்ற ஒன்று எச்சரிக்கை குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, லுக் பத்திரிகை தனது இதழில் அந்தக் குறியீட்டை ஒரு கொடியுடன் இணைத்து வெளியிட்டது.
பச்சை, வெள்ளை என்று மாறி மாறி 13 வண்ணப்பட்டைகளுடன் காணப்பட்ட அந்தக் கொடி அமெரிக்க கொடியைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கக் கொடியில் காணப்படும் நட்சத்திரங்களுக்குப் பதிலாக பச்சை நிறத்தில் சுற்றுச்சூழல் குறித்த குறியீட்டுடன் இக்கொடி காணப்பட்டது.
1969 ஆம் ஆண்டு விளம்பர வாசக எழுத்தாளரான ஜுலியன் கீனிக் என்பவர் செனட்டர் நெல்சனின் அமைப்புக் குழுவில் இருந்ததுடன், இந்த நிகழ்விற்கு "எர்த் டே" என்று பெயரிட்டார்.
இந்தப் புதிய நிகழ்வைக் கொண்டாடத் தேர்ந்தெடுப்பட்ட நாள் ஏப்ரல் 22 என்பதுடன், அது கீனிக்கின் பிறந்த நாளாகவும் அமைந்தது.
"பர்த் டே" என்கிற சந்தம் அமைந்ததால் "எர்த் டே" என்று பெயரிடுவது எளிதாக இருந்ததாக அவர் கூறினார்.
1969 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரையில் கிளேட்வின் ஹில் பின்வருமாறு எழுதினார்
செனட்டர் நெல்சனின் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க டெனிஸ் ஹேய்ஸ் என்பவர் பணியில் அமர்த்தப்பட்டார்.
ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கும் குறிக்கோளுடன் ஏறத்தாழ இரண்டு கோடி அமெரிக்கர்கள் இதில் பங்கேற்றனர்.
ஹேய்ஸூம் அவரது அலுவலர்களும் ஒரு கடலோரத்திலிருந்து மறு கடலோரம் வரையிலான மிகப் பெரிய பேரணிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின.
மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், சீர்படுத்தப் படாத கழிவு நீர், நச்சுத் தன்மையுள்ள குப்பைகள், பூச்சிக்கொல்லிகள், காடுகளை அழித்தல் மற்றும் காட்டு விலங்குகளின் பேரழிவு போன்றவற்றை எதிர்த்துப் போராடி வந்த குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டி சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உலகம் முழுவதும் அறியச்செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய உந்துதல் சக்தி கிடைத்தது. அத்துடன் 1992 ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் ஐக்கிய நாடுகள் சபை புவி குறித்து விவாதிப்பதற்கான உயர்மட்ட சந்திப்பிற்கு வழி கோலியது.
2000 ஆம் ஆண்டு நெருங்கும் தறுவாயில், புவி வெப்பமடைதல் மற்றும் சுத்தமான எரிசக்தியை மையப்படுத்திய மற்றுமொரு செயல் திட்டத்தை தலைமை ஏற்று நடத்த ஹேய்ஸ் ஒப்புக் கொண்டார்.
2000 ஆம் ஆண்டின் ஏப்ரல் 22 புவி நாளானது 1990 ஆம் ஆண்டு புவி நாளில் பொது மக்களின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையை நினைவுபடுத்துவதாக இருந்தது.
2000 ஆம் ஆண்டு புவி நாளுக்கான, போராட்டக்காரர்களை இணைக்க இணையதளம் உதவியாக அமைந்தது. அத்துடன் வரலாற்றுச் சாதனையாக 184 நாடுகளின் கோடிக்கணக்கான மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் 5000 சுற்றுச்சூழல் குழுக்கள் கூடி விட்டனர்.
ஒரு பேசும் முரசு ஆஃப்ரிகாவின் காபோன் இல் கிராமம் கிராமமாகச் சென்றதுடன், லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியின் நேஷனல் வர்த்தக மையத்தில் கூடினர்.
2007 ஆம் ஆண்டு புவி நாளன்று, உக்ரைனின் கியவ், [[வெனிசுலா|வெனிசுவேலா]வின்] கேரகாஸ், துவாலு, பிலிப்பைன்ஸின் மணிலா, டோகோ, ஸ்பெயினின் மாட்ரிட், லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற ஆயிரக்கணக்கான இடங்களில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் இதுகுறித்த நடவடிக்கைகளில் பங்கேற்ற ஒன்றிணைந்தனர். இன்றளவில் நடத்தப்பட்ட புவி நாட்களுள் இதுவே மிகப் பெரியது எனலாம்.
1970 ஆம் ஆண்டு முதன் முதலில் சுற்றுச்சூழல் குடியுரிமை, வருடந்தோறும் அதிகரிக்கும் உள்நாட்டு மற்றும் உலகம் தழுவிய நடவடிக்கையை ஊக்கப்படுத்த நிர்வாகிகளால் புவி நாள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
புவி நாள் கூட்டமைப்பு மூலமாக போராட்டக்காரர்கள் உள்ளூர், உள்நாடு மற்றும் உலக அளவிலான கொள்கை மாற்றங்களை தெரிந்து கொள்ள முடியும்.
சர்வதேச கூட்டமைப்பு 174 நாடுகளில் 17000 அமைப்புகளை ஒன்றிணைக்கிறது. உள்நாட்டு செயல் திட்டம் 5000 குழுக்களையும் 25000க்கும் அதிகமான பயிற்சியாளர்களையும் வருடந்தோறும் சமூக முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது
வானியலின்படி இரவும் பகலும் சமமான புவி நாள், வடகோளப் பகுதியில் மத்திய வசந்த காலத்திலும் மற்றும் தென் கோளப் பகுதியில் மத்திய இலையுதிர் காலத்தின்போது ஏற்படுவதாகும். துல்லியமான தருணத்தை குறிக்கும் விதமாக இரவும் பகலும் சமமான நாள் மார்ச் 20 ஆம் தேதி வாக்கில் கொண்டாடப்படுகிறது.
இரவும் பகலும் சமமான நாள் என்பது நேரத்தின் அடிப்படையில், சூரியனின் மையப் பகுதியானது பூமத்திய ரேகையின் நேர் "உச்சியில்" ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 தேதி வாக்கில் அமைகின்ற நிகழ்வாகும் (ஒரு முழு நாள் அல்ல).
பெரும்பாலான கலாச்சாரங்களில் இரவும் பகலும் சமமான நாள் என்பது தட்சிணாய காலத்தில் தொடங்கி, உத்தராயண காலத்தில் நிறைவடையும்படியாக இருக்கிறது.
1969 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் "எர்த் டே" எனப்படும் உலகம் தழுவிய விடுமுறை நாளை ஜான் மகோநெல் முதன் முதலில் வெளியிட்டார்.
1970 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதியன்று சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் ஜோஸப் ஆலியோடோவால் முதல் புவி நாள் பிரகடனம் வெளியிடப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோவின், டேவிஸ் மற்றும் பல நகரங்களில் வெவ்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன், கலிபோர்னியாவில் பல-நாள் தெரு விருந்துகளும் நடத்தப்பட்டன.
ஐக்கய நாடுகளின் பொதுச் செயலாளர் யு தாண்ட் இந்த வருடாந்திர நிகழ்ச்யை கொண்டாடும் மகோநெல்லின் முயற்சியை ஆதரித்தார் என்பதுடன், 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் தேதி இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டு பின்வருமாறு கூறினார் :
1972 ஆம் ஆண்டின் இரவும் பகலும் சமமான மார்ச் புவி நாளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் வால்ட்ஹைம் கடைபிடித்து வந்தார் என்பதுடன், அந்த மார்ச் உத்தராயணத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் புவி நாள் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்கின்றன (ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 22 ஆம் தேதி உலகம் தழுவிய புவி நாள் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறது).
மார்கரெட் மீட் உத்தராயணப் புவி நாளுக்கு தனது ஆதரவை அளித்ததுடன், 1978 ஆம் ஆண்டு பின்வருமாறு அறிவித்தார்:
"புவி நாள் என்பது எல்லா தேசீய எல்லைகளையும் கடந்து, எல்லா பூகோள ஒருமைப்பாடுகளையும் பாதுகாத்து, மலைகளையும், கடல்களையும், கால இறுக்கங்களையும் கடந்து அதே சமயம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு ஒப்பந்தம் ஆகும். அதே சமயம் இயற்கையின் இசைவை பாதுகாக்க, அதே சமயம் கால அளவீடும் விண்வெளி வழியிலான உடனடி தொடர்பு, மற்றும் தொழில் நுட்பத்தின் வெற்றிகளையும் எடுத்துக்கொண்டு செயல்படும் புனிதமான நாளாகும்.
புவி நாள் வானவியல் விநோதங்களை ஒரு புதிய வழியில் நோக்குகிறது - அது ஒரு மிகப் பழைமையான வழியும் கூட. வசந்த கால உத்தராயணமானது சூரியன் பூமத்திய ரேகையைக் கடக்கும் நேரம் மற்றும் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு பகல் நேரங்கள் சமமாக இருக்கும் தருணத்தை எடுத்துக் கொள்கிறது. இதைக் குறியாக வைத்துத்தான் வருடாந்திர அட்டவணையில் புவி நாள் எத்தகைய வாழ்க்கை கொண்டு வருகிறது என்கிற தத்துவத்தையும் நம்மால் புரிந்துகொள்ள இயலும். மார்ச் உத்தராயணத்தினால் கோள்கள் மேலும் கவனத்துடன் நோக்கப்படுகின்றன, அத்துடன் விண் வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் கிடைக்கக்கூடிய தோற்றத்தில் அடிப்படையில் புவி நாளைக் குறித்த ஒரு கொடி உருவாக்கப்பட்டுள்ளது."
அமெரிக்காவில் கொண்டாட்டங்கள் நடக்கும் அதே சமயத்தில் உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. 2008 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சடங்குகளைத் தவிர நியூஸிலாந்து, கலிபோர்னியா, வியன்னா, பாரிஸ், லிதுவேனியா, டோக்கியோ மற்றும் பல இடங்களில் மணி அடித்து சடங்குகள் நடத்தப்படுகின்றன. உத்தராயணப் புவி நாள் ஐக்கிய நாடுகள் சபையில் எர்த் சொசைட்டி பௌண்டேஷனால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
1960 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் அமெரிக்காவின் மிகவும் சுறுசுறுப்பான காலம் ஆகும். 1960 ஆம் ஆண்டுடின் மத்தியில் வைல்டர்நஸ் ஆக்ட் ஐ காங்கிரஸ் எல்லாவற்றையும் நிறைவேற்றத் தொடங்கியது, மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி வில்லியம் ஓ.டக்ளஸ் "மரங்களுக்காக யார் பேசுகிறார்கள் ?" என்று வினவினார்.
அந்த வருடம் 2 கோடிக்கும் மேலான மக்கள் பங்கேற்றனர், மற்றும் தற்போது புவி நாள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் தேதி 50 கோடி மக்களாலும் 175 நாடுகளின் தேசிய அரசாங்கங்களாலும் கொண்டாடப்படுகிறது.
சுற்றுச்சூழல் போராட்டக்காரரான செனட்டர் நெல்சன், இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் ஒரு முக்கிய பங்காற்றினார், அத்துடன் அவர் தனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க சுற்றுச்சூழல் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அந்தக் காலத்தில் நடைபெற்ற வியட்நாம் போர் எதிர்ப்புப் போராட்டங்களைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
புவி நாள் என்கிற கருத்து முதன் முறையாக ஜேஃஎப்கே க்கு ஃபிரெட் டட்டன் ஆல் எழுதப்பட்ட ஒரு அலுவலகக் குறிப்பில் முன்மொழியப்பட்டது
முதல் புவி நாளன்று அமெரிக்கா முழுவதும் இரண்டாயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள், சுமார் பத்தாயிரம் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான சமுதாயங்களின் பங்கேற்பாளர்களும், கொண்டாட்டக்காரர்களும் இருந்தனர்.
மிக முக்கியமாக, இது "சுற்றுச்சூழல் சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவான அமைதிப் போராட்டங்களுக்கு 2 கோடி அமெரிக்கர்களை ஒளியை நோக்கி இழுத்து வந்தது."
அந்த புவி நாள் "வெற்றிக்கு" அடித்தள மக்களின் தன்னிச்சையான பதில் தான் காரணம் என்று செனட்டர் நெல்சன் கூறினார்.
2 கோடி போராட்டக்காரர்களும் ஆயிரக்கணக்கான பள்ளிகளும் உள்ளூர் சமுதாயங்களும் பங்கேற்றன.
சுற்றுச்சூழலுக்காக சட்டம் இயற்றுதல் ஒரு கணிசமான, நீடித்து நிற்கக் கூடிய மக்கள் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று அமெரிக்க அரசியல்வாதிகளை உணரச்செய்திருப்பதாக நெல்சன் நேரிடையாகக் குறிப்பிட்டார். 1970 ஆம் ஆண்டு புவி நாள் காரணமாக சுத்தமான காற்று, காட்டு நிலங்கள், கடல் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியது.
தற்போது அது லாப நோக்கமில்லாத புவி நாள் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு 175 நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அந்த கூட்டமைப்பு கூற்றுப்படி புவி நாள் இப்போது "ஒவ்வொரு வருடமும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் கொண்டாடப்படுகிற, உலகத்தின் மிகப் பெரிய மதச் சார்பற்ற விடுமுறை நாளாகும்."
சுற்றுச்சூழல் குழுக்கள் புவி நாளை மனித நடத்தையை மீறி நிர்வாகக் கொள்கையில் மாறுதல்களைத் தூண்டும் நாளாக மாற்ற முயன்று வருகின்றன.
இந்த நாள் பரீட்சைகளின் போதோ அல்லது வசந்த கால விடுமுறைகளில் வரவில்லை, அத்துடன் மத சம்பந்தப்பட்ட ஈஸ்டர் போன்ற விடுமுறை நாட்களிலும் வரவில்லை. இது வசந்த காலத்தின் கடைசிப் பகுதி என்பதால் சீதோஷ்ண நிலையும் சௌகரியமாக உள்ளது.
வகுப்பில் அதிக அளவு மாணவர்கள் இருக்கக்கூடும், எனவே வாரத்தின் மத்தியில் மற்ற நிகழ்ச்சிகளுடன் குறைவான போட்டியே இருக்கும் என்ற காரணத்தினாலே, ஏப்ரல் 22 ஆம் தேதி புதன் கிழமையை அவர் தேர்ந்தெடுத்தார்.
லெனினின் 100வது பிறந்த நாளை வேண்டுமென்றே தான் தேர்ந்தெடுத்தீர்களா என்று கேட்டதற்கு, நெல்சன் பின்வருமாறு கூறினார்: உலகத்தில் 370 கோடி மக்கள் இருக்கின்றனர் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் மட்டுமே என்ற நிலையில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி மக்களின் பிறந்த நாள் வருகிறது என்று அவர் விளக்கமளித்தார்.
"எந்த ஒரு நாளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் மாறி மாறி பிறக்கிறார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"உலகத்தின் முதல் சுற்றுச்சூழல்வாதி என்று பலராலும் கருதப்படும் அசிசி ஐச் சேர்ந்த செயின்ட் பிரான்சிஸ் ஏப்ரல் 22 அன்று பிறந்தவர்தான்."
" அமெரிக்காவின் ஃபெடரல் பியுரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் இயக்குனர் ஜே.எட்கர் ஹூவருக்கு லெனின் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்; 1970 ஆம் ஆண்டு போராட்டங்களின் போது ஃஎப்பிஐ வேவு பார்த்ததாக சொல்லப்பட்டது.
லெனின் எப்போதுமே ஒரு சுற்றுச்சூழல்வாதியாக அறியப்பட்டவர் அல்லர் என்றபோதிலும், லெனினின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத்தான் அந்த நாள் தேர்ந்தடுக்கப்பட்டது என்கிற எண்ணம் சில இடங்களில் இன்னும் நிலவுகிறது. ஆரம்ப கால ஏற்பாடுகள் நடந்த சமயத்தில் ஏப்ரல் 22 ஐத் தேர்வு செய்ய சில இடதுசாரிக் குழுக்கள் நெல்சன் மீது "செல்வாக்கைப் பயன்படுத்தியதாக" கூறியிருக்கிறார்கள், ஆனால் இது அவர் வேண்டுமென்றே எடுத்த முடிவாகத் தோன்றவில்லை.
நெப்ராஸ்காவைத் தவிர, மிகவும் பரவலாகக் கொண்டாடப்படுகிற புவி நாளால் இது பெரும்பாலும் பொலிவிழந்து காணப்படுகிறது.
அமைதிக்காக போராடிய ஜான் மகோநெல் என்பவரால் 1969 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மரபின்படி, ஒவ்வொரு வருடமும் இரவும் பகலும் சமமாக வரும் மார்ச் நாளன்று, பெரும்பாலும் மார்ச் 20 ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் புவி நாளைக் கொண்டாடுகின்றன.
ஏப்ரல் 22 ஆம் நாளின் வரலாறு
1970 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் சுற்றுச்சூழல் குறித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என விஸ்கான்சின் அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டனின், சியாட்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அறிவித்தார். சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக நாடு தழுவிய அளவில் சுற்றுச்சூழல் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக செனட்டர் நெல்சன் தேசிய நிகழ்ச்சி நிரலில் முதன் முதலில் முன்மொழிந்தார்."
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகரான எட்டி ஆல்பர்ட் என்பவர் புவி நாளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
இப்போது வரை நடக்கும் இந்த வருடாந்திர சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் குறித்த பணிகளை 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக மேற்கொண்ட ஆல்பர்டின் பணி சிறப்பானது என்றாலும், புவி நாள் ஆல்பர்டின் பிறந்த நாளான ஏப்ரல் 22 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது ஒரு தரப்பினரின் கூற்றாகும்.
அந்தக் கால கட்டத்தில் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மீது அளவு கடந்த தாக்கத்தை ஏற்படுத்திய கிரீன் ஏக்கர்ஸ் என்ற தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆல்பர்ட் இன்றளவும் சிறப்பான முறையில் அறியப்படுகிறார்.
ரான் கோப் என்பவர் சுற்றுப்புறச்சூழல் குறித்த குறியீடு ஒன்றை உருவாக்கினார். அது பின்னர் புவி நாள் குறியீடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது, அத்துடன் அது மக்களின் பொதுச் சொத்தாக அறிவிக்கப்பட்டது. அந்தக் குறியீடு முறையே "என்விரோன்மேன்ட்" மற்றும் "ஆர்கானிசம்" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துக்களின் ஒருங்கிணைப்பாகும்.
வரலாறு முழுவதும் தீட்டா குறியீடு அல்லது அது போன்ற ஒன்று எச்சரிக்கை குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, லுக் பத்திரிகை தனது இதழில் அந்தக் குறியீட்டை ஒரு கொடியுடன் இணைத்து வெளியிட்டது.
பச்சை, வெள்ளை என்று மாறி மாறி 13 வண்ணப்பட்டைகளுடன் காணப்பட்ட அந்தக் கொடி அமெரிக்க கொடியைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கக் கொடியில் காணப்படும் நட்சத்திரங்களுக்குப் பதிலாக பச்சை நிறத்தில் சுற்றுச்சூழல் குறித்த குறியீட்டுடன் இக்கொடி காணப்பட்டது.
1969 ஆம் ஆண்டு விளம்பர வாசக எழுத்தாளரான ஜுலியன் கீனிக் என்பவர் செனட்டர் நெல்சனின் அமைப்புக் குழுவில் இருந்ததுடன், இந்த நிகழ்விற்கு "எர்த் டே" என்று பெயரிட்டார்.
இந்தப் புதிய நிகழ்வைக் கொண்டாடத் தேர்ந்தெடுப்பட்ட நாள் ஏப்ரல் 22 என்பதுடன், அது கீனிக்கின் பிறந்த நாளாகவும் அமைந்தது.
"பர்த் டே" என்கிற சந்தம் அமைந்ததால் "எர்த் டே" என்று பெயரிடுவது எளிதாக இருந்ததாக அவர் கூறினார்.
1969 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரையில் கிளேட்வின் ஹில் பின்வருமாறு எழுதினார்
"சுற்றுச் சூழல் நெருக்கடி" பற்றிய அதிகரித்து வரும் கவலை, வியட்நாம் போர் பற்றிய மாணவர்களின் அதிருப்தியை மங்கச் செய்து விடும் விதத்தில் நாட்டில் சுழல் போல் வேகமாகப் பரவி வருகிறது.....வியட்நாமில் நடந்த போராட்டங்களைப் போன்று சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்காக அடுத்த வசந்த காலத்தில் ஒரு நாளை தேசிய நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை குழு விவாதப் பொருளாகக் கருதி செனட்டர் கய்லார்ட் நெல்சனின் அலுவலகத்திலிருந்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.... என்று கூறினார்."
செனட்டர் நெல்சனின் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க டெனிஸ் ஹேய்ஸ் என்பவர் பணியில் அமர்த்தப்பட்டார்.
திட்ட விரிவாக்கமும் தொடர்ந்த முன்னேற்றமும்
1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட புவி நாள் நவீன சுற்றுச்சூழல் போராட்டத்தின் துவக்கம் என்று கூறலாம்.ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கும் குறிக்கோளுடன் ஏறத்தாழ இரண்டு கோடி அமெரிக்கர்கள் இதில் பங்கேற்றனர்.
ஹேய்ஸூம் அவரது அலுவலர்களும் ஒரு கடலோரத்திலிருந்து மறு கடலோரம் வரையிலான மிகப் பெரிய பேரணிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின.
மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், சீர்படுத்தப் படாத கழிவு நீர், நச்சுத் தன்மையுள்ள குப்பைகள், பூச்சிக்கொல்லிகள், காடுகளை அழித்தல் மற்றும் காட்டு விலங்குகளின் பேரழிவு போன்றவற்றை எதிர்த்துப் போராடி வந்த குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டி சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உலகம் முழுவதும் அறியச்செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய உந்துதல் சக்தி கிடைத்தது. அத்துடன் 1992 ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் ஐக்கிய நாடுகள் சபை புவி குறித்து விவாதிப்பதற்கான உயர்மட்ட சந்திப்பிற்கு வழி கோலியது.
2000 ஆம் ஆண்டு நெருங்கும் தறுவாயில், புவி வெப்பமடைதல் மற்றும் சுத்தமான எரிசக்தியை மையப்படுத்திய மற்றுமொரு செயல் திட்டத்தை தலைமை ஏற்று நடத்த ஹேய்ஸ் ஒப்புக் கொண்டார்.
2000 ஆம் ஆண்டின் ஏப்ரல் 22 புவி நாளானது 1990 ஆம் ஆண்டு புவி நாளில் பொது மக்களின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையை நினைவுபடுத்துவதாக இருந்தது.
2000 ஆம் ஆண்டு புவி நாளுக்கான, போராட்டக்காரர்களை இணைக்க இணையதளம் உதவியாக அமைந்தது. அத்துடன் வரலாற்றுச் சாதனையாக 184 நாடுகளின் கோடிக்கணக்கான மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் 5000 சுற்றுச்சூழல் குழுக்கள் கூடி விட்டனர்.
ஒரு பேசும் முரசு ஆஃப்ரிகாவின் காபோன் இல் கிராமம் கிராமமாகச் சென்றதுடன், லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியின் நேஷனல் வர்த்தக மையத்தில் கூடினர்.
2007 ஆம் ஆண்டு புவி நாளன்று, உக்ரைனின் கியவ், [[வெனிசுலா|வெனிசுவேலா]வின்] கேரகாஸ், துவாலு, பிலிப்பைன்ஸின் மணிலா, டோகோ, ஸ்பெயினின் மாட்ரிட், லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற ஆயிரக்கணக்கான இடங்களில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் இதுகுறித்த நடவடிக்கைகளில் பங்கேற்ற ஒன்றிணைந்தனர். இன்றளவில் நடத்தப்பட்ட புவி நாட்களுள் இதுவே மிகப் பெரியது எனலாம்.
புவி நாள் கூட்டமைப்பு
1970 ஆம் ஆண்டு முதன் முதலில் சுற்றுச்சூழல் குடியுரிமை, வருடந்தோறும் அதிகரிக்கும் உள்நாட்டு மற்றும் உலகம் தழுவிய நடவடிக்கையை ஊக்கப்படுத்த நிர்வாகிகளால் புவி நாள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
புவி நாள் கூட்டமைப்பு மூலமாக போராட்டக்காரர்கள் உள்ளூர், உள்நாடு மற்றும் உலக அளவிலான கொள்கை மாற்றங்களை தெரிந்து கொள்ள முடியும்.
சர்வதேச கூட்டமைப்பு 174 நாடுகளில் 17000 அமைப்புகளை ஒன்றிணைக்கிறது. உள்நாட்டு செயல் திட்டம் 5000 குழுக்களையும் 25000க்கும் அதிகமான பயிற்சியாளர்களையும் வருடந்தோறும் சமூக முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது
வானியலின்படி இரவும் பகலும் சமமான புவி நாள், வடகோளப் பகுதியில் மத்திய வசந்த காலத்திலும் மற்றும் தென் கோளப் பகுதியில் மத்திய இலையுதிர் காலத்தின்போது ஏற்படுவதாகும். துல்லியமான தருணத்தை குறிக்கும் விதமாக இரவும் பகலும் சமமான நாள் மார்ச் 20 ஆம் தேதி வாக்கில் கொண்டாடப்படுகிறது.
இரவும் பகலும் சமமான நாள் என்பது நேரத்தின் அடிப்படையில், சூரியனின் மையப் பகுதியானது பூமத்திய ரேகையின் நேர் "உச்சியில்" ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 தேதி வாக்கில் அமைகின்ற நிகழ்வாகும் (ஒரு முழு நாள் அல்ல).
பெரும்பாலான கலாச்சாரங்களில் இரவும் பகலும் சமமான நாள் என்பது தட்சிணாய காலத்தில் தொடங்கி, உத்தராயண காலத்தில் நிறைவடையும்படியாக இருக்கிறது.
1969 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் "எர்த் டே" எனப்படும் உலகம் தழுவிய விடுமுறை நாளை ஜான் மகோநெல் முதன் முதலில் வெளியிட்டார்.
1970 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதியன்று சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் ஜோஸப் ஆலியோடோவால் முதல் புவி நாள் பிரகடனம் வெளியிடப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோவின், டேவிஸ் மற்றும் பல நகரங்களில் வெவ்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன், கலிபோர்னியாவில் பல-நாள் தெரு விருந்துகளும் நடத்தப்பட்டன.
ஐக்கய நாடுகளின் பொதுச் செயலாளர் யு தாண்ட் இந்த வருடாந்திர நிகழ்ச்யை கொண்டாடும் மகோநெல்லின் முயற்சியை ஆதரித்தார் என்பதுடன், 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் தேதி இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டு பின்வருமாறு கூறினார் :
நமது அழகான விண்வெளிக் கப்பலான பூமி தனது வெதுவெதுப்பான, மென்மையான, உயிரோட்டமுள்ள வாழ்வினங்களுடன் குளிர்ந்த விண்வெளியில் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்க இனி அமைதியான, உற்சாகமான புவி நாட்கள் மட்டுமே வர வேண்டும்.
1972 ஆம் ஆண்டின் இரவும் பகலும் சமமான மார்ச் புவி நாளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் வால்ட்ஹைம் கடைபிடித்து வந்தார் என்பதுடன், அந்த மார்ச் உத்தராயணத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் புவி நாள் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்கின்றன (ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 22 ஆம் தேதி உலகம் தழுவிய புவி நாள் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறது).
மார்கரெட் மீட் உத்தராயணப் புவி நாளுக்கு தனது ஆதரவை அளித்ததுடன், 1978 ஆம் ஆண்டு பின்வருமாறு அறிவித்தார்:
"புவி நாள் என்பது எல்லா தேசீய எல்லைகளையும் கடந்து, எல்லா பூகோள ஒருமைப்பாடுகளையும் பாதுகாத்து, மலைகளையும், கடல்களையும், கால இறுக்கங்களையும் கடந்து அதே சமயம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு ஒப்பந்தம் ஆகும். அதே சமயம் இயற்கையின் இசைவை பாதுகாக்க, அதே சமயம் கால அளவீடும் விண்வெளி வழியிலான உடனடி தொடர்பு, மற்றும் தொழில் நுட்பத்தின் வெற்றிகளையும் எடுத்துக்கொண்டு செயல்படும் புனிதமான நாளாகும்.
புவி நாள் வானவியல் விநோதங்களை ஒரு புதிய வழியில் நோக்குகிறது - அது ஒரு மிகப் பழைமையான வழியும் கூட. வசந்த கால உத்தராயணமானது சூரியன் பூமத்திய ரேகையைக் கடக்கும் நேரம் மற்றும் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு பகல் நேரங்கள் சமமாக இருக்கும் தருணத்தை எடுத்துக் கொள்கிறது. இதைக் குறியாக வைத்துத்தான் வருடாந்திர அட்டவணையில் புவி நாள் எத்தகைய வாழ்க்கை கொண்டு வருகிறது என்கிற தத்துவத்தையும் நம்மால் புரிந்துகொள்ள இயலும். மார்ச் உத்தராயணத்தினால் கோள்கள் மேலும் கவனத்துடன் நோக்கப்படுகின்றன, அத்துடன் விண் வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் கிடைக்கக்கூடிய தோற்றத்தில் அடிப்படையில் புவி நாளைக் குறித்த ஒரு கொடி உருவாக்கப்பட்டுள்ளது."
உத்தராயணத் தருணத்தில், ஜப்பானால் ஐக்கிய நாடுகளுக்கு நன்கொடையாகத் தரப்பட்ட ஜப்பானிய அமைதி மணியை ஒலித்து புவி நாள் அனுஷ்டிப்பது மரபாகும்.
அமெரிக்காவில் கொண்டாட்டங்கள் நடக்கும் அதே சமயத்தில் உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. 2008 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சடங்குகளைத் தவிர நியூஸிலாந்து, கலிபோர்னியா, வியன்னா, பாரிஸ், லிதுவேனியா, டோக்கியோ மற்றும் பல இடங்களில் மணி அடித்து சடங்குகள் நடத்தப்படுகின்றன. உத்தராயணப் புவி நாள் ஐக்கிய நாடுகள் சபையில் எர்த் சொசைட்டி பௌண்டேஷனால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஏப்ரல் 22 அனுஷ்டிப்புகள்
1960 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் அமெரிக்காவின் மிகவும் சுறுசுறுப்பான காலம் ஆகும். 1960 ஆம் ஆண்டுடின் மத்தியில் வைல்டர்நஸ் ஆக்ட் ஐ காங்கிரஸ் எல்லாவற்றையும் நிறைவேற்றத் தொடங்கியது, மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி வில்லியம் ஓ.டக்ளஸ் "மரங்களுக்காக யார் பேசுகிறார்கள் ?" என்று வினவினார்.
|நியுயார்க் இன் நசாவ் கௌன்ட்டி]]யில் நடந்த 1960 ஆம் ஆண்டிற்கு முந்தைய டிடிடீக்கு எதிரான அடித்தள போராட்டம், ராக்கேல் கார்சன் தனது அதிக அளவு விற்பனையிலான சைலன்ட் ஸ்ப்ரிங் என்ற நூலை 1962 ஆம் ஆண்டு எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டு ரால்ஃப் நாடர் [[உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பு, உயிரினங்கள் மற்றும் சுழ்நிலை இவைகளுக்கு உள்ள தொடர்பு பற்றிய அறிவியல்|சுற்றுப்புறவியலின்]] முக்கியத்துவம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
புவி நாள் 1970
பரவலான சுற்றுச்சூழல் சீரழிவுக்கு பதிலளிக்கும் விதத்தில், அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன், சுற்றுச்சூழல் குழு விவாதப்பொருள் அல்லது 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற இருந்த புவி நாளுக்கு அழைப்பு விடுத்தார்.அந்த வருடம் 2 கோடிக்கும் மேலான மக்கள் பங்கேற்றனர், மற்றும் தற்போது புவி நாள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் தேதி 50 கோடி மக்களாலும் 175 நாடுகளின் தேசிய அரசாங்கங்களாலும் கொண்டாடப்படுகிறது.
சுற்றுச்சூழல் போராட்டக்காரரான செனட்டர் நெல்சன், இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் ஒரு முக்கிய பங்காற்றினார், அத்துடன் அவர் தனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க சுற்றுச்சூழல் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அந்தக் காலத்தில் நடைபெற்ற வியட்நாம் போர் எதிர்ப்புப் போராட்டங்களைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
புவி நாள் என்கிற கருத்து முதன் முறையாக ஜேஃஎப்கே க்கு ஃபிரெட் டட்டன் ஆல் எழுதப்பட்ட ஒரு அலுவலகக் குறிப்பில் முன்மொழியப்பட்டது
1970 ஆம் ஆண்டின் புவி நாள் விளைவுகள்
அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் புவி நாளின் பிரபல்யம் நிரூபணமாகியது.முதல் புவி நாளன்று அமெரிக்கா முழுவதும் இரண்டாயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள், சுமார் பத்தாயிரம் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான சமுதாயங்களின் பங்கேற்பாளர்களும், கொண்டாட்டக்காரர்களும் இருந்தனர்.
மிக முக்கியமாக, இது "சுற்றுச்சூழல் சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவான அமைதிப் போராட்டங்களுக்கு 2 கோடி அமெரிக்கர்களை ஒளியை நோக்கி இழுத்து வந்தது."
அந்த புவி நாள் "வெற்றிக்கு" அடித்தள மக்களின் தன்னிச்சையான பதில் தான் காரணம் என்று செனட்டர் நெல்சன் கூறினார்.
2 கோடி போராட்டக்காரர்களும் ஆயிரக்கணக்கான பள்ளிகளும் உள்ளூர் சமுதாயங்களும் பங்கேற்றன.
சுற்றுச்சூழலுக்காக சட்டம் இயற்றுதல் ஒரு கணிசமான, நீடித்து நிற்கக் கூடிய மக்கள் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று அமெரிக்க அரசியல்வாதிகளை உணரச்செய்திருப்பதாக நெல்சன் நேரிடையாகக் குறிப்பிட்டார். 1970 ஆம் ஆண்டு புவி நாள் காரணமாக சுத்தமான காற்று, காட்டு நிலங்கள், கடல் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியது.
தற்போது அது லாப நோக்கமில்லாத புவி நாள் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு 175 நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அந்த கூட்டமைப்பு கூற்றுப்படி புவி நாள் இப்போது "ஒவ்வொரு வருடமும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் கொண்டாடப்படுகிற, உலகத்தின் மிகப் பெரிய மதச் சார்பற்ற விடுமுறை நாளாகும்."
சுற்றுச்சூழல் குழுக்கள் புவி நாளை மனித நடத்தையை மீறி நிர்வாகக் கொள்கையில் மாறுதல்களைத் தூண்டும் நாளாக மாற்ற முயன்று வருகின்றன.
ஏப்ரல் 22 இன் முக்கியத்துவம்
- சுற்றுச்சூழல் பற்றிய குழு விவாதப்பொருளில் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் நாளாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்த நாளை செனட்டர் நெல்சன் தேர்ந்தெடுத்தார். இதற்கு ஏப்ரல் 19 -25 தேதி வரையிலான நாட்களே சிறந்தது என அவர் முடிவு செய்தார்.
இந்த நாள் பரீட்சைகளின் போதோ அல்லது வசந்த கால விடுமுறைகளில் வரவில்லை, அத்துடன் மத சம்பந்தப்பட்ட ஈஸ்டர் போன்ற விடுமுறை நாட்களிலும் வரவில்லை. இது வசந்த காலத்தின் கடைசிப் பகுதி என்பதால் சீதோஷ்ண நிலையும் சௌகரியமாக உள்ளது.
வகுப்பில் அதிக அளவு மாணவர்கள் இருக்கக்கூடும், எனவே வாரத்தின் மத்தியில் மற்ற நிகழ்ச்சிகளுடன் குறைவான போட்டியே இருக்கும் என்ற காரணத்தினாலே, ஏப்ரல் 22 ஆம் தேதி புதன் கிழமையை அவர் தேர்ந்தெடுத்தார்.
லெனினின் 100வது பிறந்த நாளை வேண்டுமென்றே தான் தேர்ந்தெடுத்தீர்களா என்று கேட்டதற்கு, நெல்சன் பின்வருமாறு கூறினார்: உலகத்தில் 370 கோடி மக்கள் இருக்கின்றனர் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் மட்டுமே என்ற நிலையில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி மக்களின் பிறந்த நாள் வருகிறது என்று அவர் விளக்கமளித்தார்.
"எந்த ஒரு நாளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் மாறி மாறி பிறக்கிறார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"உலகத்தின் முதல் சுற்றுச்சூழல்வாதி என்று பலராலும் கருதப்படும் அசிசி ஐச் சேர்ந்த செயின்ட் பிரான்சிஸ் ஏப்ரல் 22 அன்று பிறந்தவர்தான்."
- ஏப்ரல் 21 ஆம் தேதி ஸியெர்ரா கிளப்பை நிறுவிய ஜான் முயிரின் பிறந்த நாள் ஆகும்.
- 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி தான் விளாடிமிர் லெனின் 100 வது பிறந்த நாளாகும். அந்த நாள் ஒன்றும் தற்செயலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் அல்ல உண்மை என்னவென்றால் அது "ஒரு கம்யுனிஸ்ட் தந்திரம்" என்று சிலர் சந்தேகப்படுவதாக டைம்ஸ் பத்திரிகை] எழுதியது. மேலும் "அமெரிக்கக் குழந்தைகளை தங்களுக்கு வசதியான ஒரு சுற்றுச்சூழலில் வாழ வைப்பது என்று நாசக்கார சக்திகள் திட்டம் போடுகிறார்கள்" என்று டாட்டர்ஸ் ஆப் தி அமெரிக்கன் ரெவோலுஷன் உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி அப்பத்திரிகை எழுதியிருந்ததாக நெல்சன் மேலும் தெரிவித்தார்.
" அமெரிக்காவின் ஃபெடரல் பியுரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் இயக்குனர் ஜே.எட்கர் ஹூவருக்கு லெனின் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்; 1970 ஆம் ஆண்டு போராட்டங்களின் போது ஃஎப்பிஐ வேவு பார்த்ததாக சொல்லப்பட்டது.
லெனின் எப்போதுமே ஒரு சுற்றுச்சூழல்வாதியாக அறியப்பட்டவர் அல்லர் என்றபோதிலும், லெனினின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத்தான் அந்த நாள் தேர்ந்தடுக்கப்பட்டது என்கிற எண்ணம் சில இடங்களில் இன்னும் நிலவுகிறது. ஆரம்ப கால ஏற்பாடுகள் நடந்த சமயத்தில் ஏப்ரல் 22 ஐத் தேர்வு செய்ய சில இடதுசாரிக் குழுக்கள் நெல்சன் மீது "செல்வாக்கைப் பயன்படுத்தியதாக" கூறியிருக்கிறார்கள், ஆனால் இது அவர் வேண்டுமென்றே எடுத்த முடிவாகத் தோன்றவில்லை.
- ஏப்ரல் 22 என்பது 1872 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு தேசிய மரம்-நடும் விடுமுறையான ஆர்போர் டேயின் நிறுவனர் ஜுலியஸ் ஸ்டெர்லிங் மோர்ட்டனின் பிறந்த நாளே ஆகும்.
நெப்ராஸ்காவைத் தவிர, மிகவும் பரவலாகக் கொண்டாடப்படுகிற புவி நாளால் இது பெரும்பாலும் பொலிவிழந்து காணப்படுகிறது.
Credits to Wikipedia.org




















1 comments:
Interesting.good post.Thank you for sharing.
Post a Comment